என் தம்பிகாக நான் அழுதால்,
60 வருடங்களுக்கு முன் நான் கட்டிக்கொண்டவள்,
60வது ஆயிரம் வருட உறவை அறுத்து எறிய சொல்லுகிறாள்...
தம்பி உனக்காக...
பதறி நானும் கண்ணீர் விட்டால்,
கதறி நானும் ஒப்பாரி வைத்தால்…
கதறிய சத்தம், காது வலிக்கிறது என்று
என்னை அடைத்து விட்டார்கள், சிறையில் இன்று.
தம்பி உனக்கு,
இருக்க இடம் இல்லை என்றாலும் ,
உடுத்த உடை இல்லை என்றாலும் ,
உண்ண உணவு இல்லை என்றாலும் ,
வாழ்கிறாய், மானத்தோடும், வீரத்தோடும்.
நானோ இங்கு,
மானம் இழந்த கோழையாய்...
கோமாளியாய்....
- சுவாமிநாதன் பாலசுப்ரமணியன்
No comments:
Post a Comment