
தீவிரவாதிகளை அடையாளம் தேடும் மனதிற்கு தீவிரவாதத்தை அடையாளம் காணத் தெரியவில்லை. தீவிரவாதம் என்பது ஒரு மனநோய். தீவிரவாதி என்பவன் அந்த நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதன். நோயாளியை கொன்றுவிடுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்பது அறிவுமிக்க மனித இனம் செய்ய வேண்டிய காரியமில்லை. அதை விடுத்து இந்த நோயின் காரணம் என்ன, என்பதை கற்க வேண்டும். எந்த சமுதாய ஏற்றத்தாழ்வு சூழ்நிலையால் இது உருவானது, நம் முன்னோர்கள் செய்த தவறு என்ன, எந்த ஒரு கொடும் செயலுக்கும் மருந்தான அன்பையும், காதலையும் இந்த நோயால் பதிக்க பட்டவர்களிடம் எப்படி செலுத்துவது, மேலும் நம் சக மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கபடாமல் தடுக்க செய்ய வேண்டிய வழிகள் என்ன என்பவற்றை நாம் அனைவரும் கற்க வேண்டும். கற்றதால் ஏற்படவேண்டிய மாற்றத்தை காதலையும், அன்பையும் குழைத்து செலுத்த வேண்டும்.
இவை அனைத்தையும் செய்ய தேவையான அன்பும், பொறுமையும் நமக்கு இல்லையன்றால் உடனடி சிகிச்சை அளிக்க படவேண்டியது நமக்குத்தான், தீவிரவாதிகளுக்கு அல்ல. தீவிரவாதத்திற்கு தேவையான மருந்து காந்தியவாதத்தில் இருக்கின்றது.
காந்தி சொல்கிறார்
"அன்பே ஆயுதம்"!
ஆகையால்
ஆயுதம் செய்.
- சுவாமிநாதன் பாலசுப்ரமணியன்
5 comments:
I agree. Ahimsa is the most powerful weapon..
Nalla sonnenga swami. thanks for sending this link. I added the URL in my favorites- Sathish, Va
Super blog! But neenga Tambiya veerathoda sanda poda solringa! Anbaiyum seiya solringa! Neenga nallavara ketavara?
Shadow is me Swami
I dont think terrorism needs Anbu to cure. It needs strong law and will to enforce. Ahimsa is the strong weapon, if your enemy is stronger than you. If you are stronger than enemy, then better crush him to death.
Post a Comment