Showing posts with label Gandhism. Show all posts
Showing posts with label Gandhism. Show all posts

Wednesday, November 26, 2008

தீவிரவாதமும் காந்தியவாதமும்

இந்த அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து உயிரினத்திலும் கற்கவும், கற்றதால் ஏற்படும் மாறுதல்களுக்கு தன்னை அதிவேகமாக உட்படுத்தி கொள்ள தக்கது மனித இனம். இந்த ஒரு காரணத்தினால்தான் நாம் மிருகங்களிடமிருந்து தளைத்து செழித்து வாழ்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக மனித இனத்திற்குள் ஏற்பட்டுள்ள தீவிரவாதம் என்ற நோயை நாம் கையாளும் விதத்ததை பார்த்தால் நாம் நமது கற்றலும் கற்றதால் ஏற்படும் மாற்றத்தை உட்படுத்தி கொள்ளுதலும் என்ற அடிப்படை குணாதியசத்தை இழந்து விட்டோமோ என்று அஞ்ச தோன்றுகிறது.


தீவிரவாதிகளை அடையாளம் தேடும் மனதிற்கு தீவிரவாதத்தை அடையாளம் காணத் தெரியவில்லை. தீவிரவாதம் என்பது ஒரு மனநோய். தீவிரவாதி என்பவன் அந்த நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதன். நோயாளியை கொன்றுவிடுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்பது அறிவுமிக்க மனித இனம் செய்ய வேண்டிய காரியமில்லை. அதை விடுத்து இந்த நோயின் காரணம் என்ன, என்பதை கற்க வேண்டும். எந்த சமுதாய ஏற்றத்தாழ்வு சூழ்நிலையால் இது உருவானது, நம் முன்னோர்கள் செய்த தவறு என்ன, எந்த ஒரு கொடும் செயலுக்கும் மருந்தான அன்பையும், காதலையும் இந்த நோயால் பதிக்க பட்டவர்களிடம் எப்படி செலுத்துவது, மேலும் நம் சக மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கபடாமல் தடுக்க செய்ய வேண்டிய வழிகள் என்ன என்பவற்றை நாம் அனைவரும் கற்க வேண்டும். கற்றதால் ஏற்படவேண்டிய மாற்றத்தை காதலையும், அன்பையும் குழைத்து செலுத்த வேண்டும்.

இவை அனைத்தையும் செய்ய தேவையான அன்பும், பொறுமையும் நமக்கு இல்லையன்றால் உடனடி சிகிச்சை அளிக்க படவேண்டியது நமக்குத்தான், தீவிரவாதிகளுக்கு அல்ல. தீவிரவாதத்திற்கு தேவையான மருந்து காந்தியவாதத்தில் இருக்கின்றது.

காந்தி சொல்கிறார்

"அன்பே ஆயுதம்"!
ஆகையால்
ஆயுதம் செய்.


- சுவாமிநாதன் பாலசுப்ரமணியன்